Public App Logo
Jansamasya
News
पुलिस
Bjp
National
Police
Bihar
India
कांग्रेस
बीजेपी
Gujarat
मुख्यमंत्री
Congress
Modi
Delhi
Viral
मारपीट
Crime
Dm
Up
अमित_शाह
Bollywood
Breakingnews
Narendramodi
Madhya_pradesh
उत्तरप्रदेश
Pmmodi
Rahulgandhi
यूपी
कानपुर

விழுப்புரம் பழைய பேருந்து நிலையம் இருளில் தவிப்பு: மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுப்பாரா? விழுப்புரம்: விழுப்புரம் நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள பழைய பேருந்து நிலையத்திற்கு தினமும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வந்து செல்கின்றனர். குறிப்பாக சுற்றுவட்டார கிராமங்களுக்கு செல்லும் பெரும்பாலான பேருந்துகள் இந்த பேருந்து நிலையம் வழியாக இயக்கப்படுவதால், கல்லூரி மாணவ-மாணவிகள் உள்பட ஏராளமானோர் இதனை பயன்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில், பழைய பேருந்து நிலையத்தில் உள்ள பயணிகள் நிழற்குடையில் மின்விளக்குகள் எரியாமல் இருள் சூழ்ந்து காணப்படுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். இரவு நேரங்களில் பயணிகள் நிழற்குடை மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளில் போதிய வெளிச்சம் இல்லாததால், பெண்கள், மாணவ-மாணவிகள் உள்ளிட்ட பயணிகள் அச்சத்துடன் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், இந்த பகுதியில் ஏற்கனவே பகல் நேரத்திலேயே ஆசிட் வீச்சு போன்ற அதிர்ச்சி சம்பவங்கள் நடந்துள்ள நிலையில், இரவு நேரத்தில் இருள் நிலவுவதால் பாதுகாப்பு குறித்த அச்சம் பொதுமக்களிடையே அதிகரித்துள்ளது. இதுகுறித்து நகராட்சி ஆணையரிடம் பலமுறை புகார் தெரிவித்தும் இதுவரை உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். எனவே, பழைய பேருந்து நிலையத்தில் பழுதடைந்த மின்விளக்குகளை உடனடியாக சரிசெய்து, பயணிகள் நிழற்குடை மற்றும் பேருந்து நிலையம் முழுவதும் போதிய வெளிச்சம் ஏற்படுத்த வேண்டும். மேலும், பயணிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு காவல் கண்காணிப்பையும் அதிகரிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பொதுமக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு மாவட்ட நிர்வாகமும் நகராட்சியும் உடனடியாக நடவடிக்கை எடுக்குமா? என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Viluppuram, Viluppuram | Aug 13, 2026

MORE NEWS

#விழுப்புரத்தில் தனியார் பேருந்து ஓட்டுநர்கள் மீது 10 பேர் கொண்ட கும்பல் தாக்குதல்#

விழுப்புரம் அருகே சிந்தாமணி பகுதியில் ஈரோட்டில் இருந்து சென்னை நோக்கி சென்ற தனியார் பேருந்து ஓட்டுநர் மாதேஸ்வரன் மற்றும் உதவியாளர் மனோஜ்குமார் ஆகியோரை, இருசக்கர வாகனத்தில் வந்த சுமார் 10 பேர் கொண்ட கும்பல் வழிவிடுவது தொடர்பான தகராறில் தாக்கியதாக கூறப்படுகிறது.

🪨 நடுரோட்டில் கற்களால் தாக்கப்பட்டதில் இருவரும் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதனை கண்டித்து தனியார் பேருந்து ஓட்டுநர்கள் பேருந்துகளை நிறுத்தி **சாலை மறியலில் ஈடுபட்டனர்.**

இதனால் திருச்சி–சென்னை புறவழிச்சாலையில் சுமார் **1 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு** ஏற்பட்டது.

தகவலறிந்து வந்த போலீசார், தாக்குதலில் ஈடுபட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததை தொடர்ந்து மறியல் கைவிடப்பட்டு போக்குவரத்து சீரானது.

📹 **தற்போது ஓட்டுநர் தாக்கப்படும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.**

⚠️ இதேபோல், ஒரு மாதத்திற்கு முன்பு இருவேல்பட்டு பகுதியில் தனியார் பேருந்து ஓட்டுநர் 3 பேரால் தாக்கப்பட்ட சம்பவமும் நடைபெற்றதாக கூறப்படுகிறது.

**தனியார் பேருந்து ஓட்டுநர்களுக்கு பாதுகாப்பு வழங்கப்படுமா?**

#விழுப்புரம் #Villupuram #PrivateBus #BusDriver #CCTV #RoadRokko #Traffic #VillupuramNews #TN32NEWS #TN32News

#விழுப்புரத்தில் தனியார் பேருந்து ஓட்டுநர்கள் மீது 10 பேர் கொண்ட கும்பல் தாக்குதல்# விழுப்புரம் அருகே சிந்தாமணி பகுதியில் ஈரோட்டில் இருந்து சென்னை நோக்கி சென்ற தனியார் பேருந்து ஓட்டுநர் மாதேஸ்வரன் மற்றும் உதவியாளர் மனோஜ்குமார் ஆகியோரை, இருசக்கர வாகனத்தில் வந்த சுமார் 10 பேர் கொண்ட கும்பல் வழிவிடுவது தொடர்பான தகராறில் தாக்கியதாக கூறப்படுகிறது. 🪨 நடுரோட்டில் கற்களால் தாக்கப்பட்டதில் இருவரும் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனை கண்டித்து தனியார் பேருந்து ஓட்டுநர்கள் பேருந்துகளை நிறுத்தி **சாலை மறியலில் ஈடுபட்டனர்.** இதனால் திருச்சி–சென்னை புறவழிச்சாலையில் சுமார் **1 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு** ஏற்பட்டது. தகவலறிந்து வந்த போலீசார், தாக்குதலில் ஈடுபட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததை தொடர்ந்து மறியல் கைவிடப்பட்டு போக்குவரத்து சீரானது. 📹 **தற்போது ஓட்டுநர் தாக்கப்படும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.** ⚠️ இதேபோல், ஒரு மாதத்திற்கு முன்பு இருவேல்பட்டு பகுதியில் தனியார் பேருந்து ஓட்டுநர் 3 பேரால் தாக்கப்பட்ட சம்பவமும் நடைபெற்றதாக கூறப்படுகிறது. **தனியார் பேருந்து ஓட்டுநர்களுக்கு பாதுகாப்பு வழங்கப்படுமா?** #விழுப்புரம் #Villupuram #PrivateBus #BusDriver #CCTV #RoadRokko #Traffic #VillupuramNews #TN32NEWS #TN32News

Viluppuram, Viluppuram | Aug 16, 2026

🚨 விழுப்புரம் இந்திரா நகரில் பரபரப்பு!

வக்கீல் காளிதாஸ் புதிதாக கட்டி வரும் வீட்டின் முன்பு பெட்ரோல் குண்டு வீச்சு!

வீட்டின் முன்பு பெட்ரோல் குண்டு வீசப்பட்டதாக கூறப்படும் சம்பவத்தால் இந்திரா நகர் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

தகவல் அறிந்த விழுப்புரம் தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர்.

பெட்ரோல் குண்டு வீசியது யார்? காரணம் என்ன? என்பது குறித்து போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

🔴 மேலும் தகவல்கள் விசாரணைக்கு பின்னர் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

#Villupuram #VillupuramNews #இந்திராநகர் #விழுப்புரம் #PetrolBomb #PoliceInvestigation #TN32NEWS

🚨 விழுப்புரம் இந்திரா நகரில் பரபரப்பு! வக்கீல் காளிதாஸ் புதிதாக கட்டி வரும் வீட்டின் முன்பு பெட்ரோல் குண்டு வீச்சு! வீட்டின் முன்பு பெட்ரோல் குண்டு வீசப்பட்டதாக கூறப்படும் சம்பவத்தால் இந்திரா நகர் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்த விழுப்புரம் தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். பெட்ரோல் குண்டு வீசியது யார்? காரணம் என்ன? என்பது குறித்து போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். 🔴 மேலும் தகவல்கள் விசாரணைக்கு பின்னர் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. #Villupuram #VillupuramNews #இந்திராநகர் #விழுப்புரம் #PetrolBomb #PoliceInvestigation #TN32NEWS

Viluppuram, Viluppuram | Aug 16, 2026

பனையபுரம் ஏரி வரத்து வாய்க்கால் தூர்வாரி பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வந்த த.வெ.க. மாவட்ட செயலாளர் விஜய் வடிவேல்.

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட முண்டியம்பாக்கம் அருகே உள்ள பனையபுரம் ஏரி வரத்து வாய்க்கால் நீண்டகாலமாக தூர்வாரப்படாமல் புதர்மண்டி கிடந்த நிலையில், பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று தமிழக வெற்றிக் கழகத்தின் விழுப்புரம் தென்மேற்கு மாவட்ட செயலாளர் விஜய் வடிவேல் தனது முயற்சியில் வாய்க்காலை தூர்வாரி சீரமைத்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வந்துள்ளார்...

விக்கிரவாண்டி #முண்டியம்பாக்கம் #பனையபுரம்

பனையபுரம் ஏரி வரத்து வாய்க்கால் தூர்வாரி பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வந்த த.வெ.க. மாவட்ட செயலாளர் விஜய் வடிவேல். விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட முண்டியம்பாக்கம் அருகே உள்ள பனையபுரம் ஏரி வரத்து வாய்க்கால் நீண்டகாலமாக தூர்வாரப்படாமல் புதர்மண்டி கிடந்த நிலையில், பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று தமிழக வெற்றிக் கழகத்தின் விழுப்புரம் தென்மேற்கு மாவட்ட செயலாளர் விஜய் வடிவேல் தனது முயற்சியில் வாய்க்காலை தூர்வாரி சீரமைத்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வந்துள்ளார்... விக்கிரவாண்டி #முண்டியம்பாக்கம் #பனையபுரம்

Viluppuram, Viluppuram | Aug 16, 2026

சுதந்திர தின விழாவில் கண்கலங்க வைத்த மல்லர் கம்பம்!
*விழுப்புரம் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் சுதந்திர தின விழா கோலாகலம்!

சுதந்திர தின விழாவையொட்டி விழுப்புரம் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியர் **தேசியக் கொடியை ஏற்றி மரியாதை செலுத்தினார்.**

இதனைத் தொடர்ந்து நடைபெற்ற **பாரம்பரிய விளையாட்டான மல்லர் கம்பம்** அனைவரது கவனத்தையும் ஈர்த்தது.

மாற்றுத்திறனாளிகளையும் இணைத்து அரசு பள்ளி மாணவர்கள் நடத்திய மல்லர் கம்பம் நிகழ்ச்சி, பார்வையாளர்களை வியப்பிலும் நெகிழ்ச்சியிலும் ஆழ்த்தியது. 

தன்னம்பிக்கை, விடாமுயற்சி, திறமை ஆகியவற்றை வெளிப்படுத்திய இந்த நிகழ்ச்சி, சுதந்திர தின விழாவில் பலரையும் **கண்கலங்க வைத்த நெகிழ்ச்சியான தருணமாக** அமைந்தது.

**உண்மையிலேயே இது “மல்லர் கம்பம்” அல்ல… மனதைத் தொட்ட “மலர் கம்பம்!” 

#சுதந்திரதினம் #விழுப்புரம் #மல்லர்கம்பம் #தமிழர்பாரம்பரியம் #TN32NEWS

சுதந்திர தின விழாவில் கண்கலங்க வைத்த மல்லர் கம்பம்! *விழுப்புரம் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் சுதந்திர தின விழா கோலாகலம்! சுதந்திர தின விழாவையொட்டி விழுப்புரம் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியர் **தேசியக் கொடியை ஏற்றி மரியாதை செலுத்தினார்.** இதனைத் தொடர்ந்து நடைபெற்ற **பாரம்பரிய விளையாட்டான மல்லர் கம்பம்** அனைவரது கவனத்தையும் ஈர்த்தது. மாற்றுத்திறனாளிகளையும் இணைத்து அரசு பள்ளி மாணவர்கள் நடத்திய மல்லர் கம்பம் நிகழ்ச்சி, பார்வையாளர்களை வியப்பிலும் நெகிழ்ச்சியிலும் ஆழ்த்தியது. தன்னம்பிக்கை, விடாமுயற்சி, திறமை ஆகியவற்றை வெளிப்படுத்திய இந்த நிகழ்ச்சி, சுதந்திர தின விழாவில் பலரையும் **கண்கலங்க வைத்த நெகிழ்ச்சியான தருணமாக** அமைந்தது. **உண்மையிலேயே இது “மல்லர் கம்பம்” அல்ல… மனதைத் தொட்ட “மலர் கம்பம்!” #சுதந்திரதினம் #விழுப்புரம் #மல்லர்கம்பம் #தமிழர்பாரம்பரியம் #TN32NEWS

Viluppuram, Viluppuram | Aug 15, 2026

Viluppuram, Viluppuram | Aug 15, 2026

விழுப்புரம் பழைய பேருந்து நிலையம் இருளில் தவிப்பு: மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுப்பாரா? விழுப்புரம்: விழுப்புரம் நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள பழைய பேருந்து நிலையத்திற்கு தினமும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வந்து செல்கின்றனர். குறிப்பாக சுற்றுவட்டார கிராமங்களுக்கு செல்லும் பெரும்பாலான பேருந்துகள் இந்த பேருந்து நிலையம் வழியாக இயக்கப்படுவதால், கல்லூரி மாணவ-மாணவிகள் உள்பட ஏராளமானோர் இதனை பயன்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில், பழைய பேருந்து நிலையத்தில் உள்ள பயணிகள் நிழற்குடையில் மின்விளக்குகள் எரியாமல் இருள் சூழ்ந்து காணப்படுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். இரவு நேரங்களில் பயணிகள் நிழற்குடை மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளில் போதிய வெளிச்சம் இல்லாததால், பெண்கள், மாணவ-மாணவிகள் உள்ளிட்ட பயணிகள் அச்சத்துடன் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், இந்த பகுதியில் ஏற்கனவே பகல் நேரத்திலேயே ஆசிட் வீச்சு போன்ற அதிர்ச்சி சம்பவங்கள் நடந்துள்ள நிலையில், இரவு நேரத்தில் இருள் நிலவுவதால் பாதுகாப்பு குறித்த அச்சம் பொதுமக்களிடையே அதிகரித்துள்ளது. இதுகுறித்து நகராட்சி ஆணையரிடம் பலமுறை புகார் தெரிவித்தும் இதுவரை உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். எனவே, பழைய பேருந்து நிலையத்தில் பழுதடைந்த மின்விளக்குகளை உடனடியாக சரிசெய்து, பயணிகள் நிழற்குடை மற்றும் பேருந்து நிலையம் முழுவதும் போதிய வெளிச்சம் ஏற்படுத்த வேண்டும். மேலும், பயணிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு காவல் கண்காணிப்பையும் அதிகரிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பொதுமக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு மாவட்ட நிர்வாகமும் நகராட்சியும் உடனடியாக நடவடிக்கை எடுக்குமா? என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது. - Viluppuram News